செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா;-
தென்காசி அருகே உள்ள விஸ்வநாத புரத்தைச்சேர்ந்த இன்பா குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றார் அவருக்கு செங்கோட்டை நூலகத்தில். வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
நூலக வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட செயலர் செண்பகக்குற்றாலம், துணைத் தலைவர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை, பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்றத் தலைவர் வேல்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். குடிமைப் பணி தேர்வுக்குத் தயார் செய்ததில், செங்கோட்டை நூலகத்தின் பங்கு குறித்து இன்பா பேசினார். அதனையெடுத்து
மேலும், குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
தேர்வுப் பொறுப்பாளர் விழுதுகள் சேகர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னார்.
நூலகர் ராமசாமி வரவேற்றார். முடிவில் வாசகர் வட்டப் பொருளாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் நன்றி கூறினார்.