மதுரையில் கின்னஸ் புத்தகத்திற்காக எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து இடம் பிடித்த ஐ.டி. ஊழியர்

பாகிஸ்தான் வாலிபரின் முந்தைய சாதனையை முறியடித்தார்…….

மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் விஜய் நாராயணன். ஐ.டி. ஊழியரான இவர் கடந்த சில ஆண்டு களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கற்று தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் டேக்வாண்டோ மூலம் கற்களை
குறைந்த நிமிடத்தில் கையால் உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.


இந்நிலையில் புதிய முயற்சியாக விஜய் நாராயணன் தனது வீட்டின் மாடி யில் எரியும் 29 சிமெண்ட் கான்கிரீட் கற்களை 30 விநாடிகளில் அடுத்தடுத்து உடைத்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி அதன் மூலம் இந்தியாவில் உள்ளது. குறைந்த வினாடியில் அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 25 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை செய்திருந்தார். தற்போது விஜய் நாராயணன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்
பட்டுள்ளது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *