செங்கோட்டையில் பாராட்டுவிழா

தென்காசி,செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இன்பாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த இன்பா ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட செயலர் செண்பகக்குற்றாலம், துணைத் தலைவர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்வுப் பொறுப்பாளர் விழுதுகள் சேகர் நிகழ்ச்சியைத் தொகுத்து
வழங்கினார். அரசு பொது நூலக
நல்நூலகர் கோ.இராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை, பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்றத் தலைவர் பொறியாளர் க.இ.வேல்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி இன்பாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

ஐஏஎஸ் தேர்வுக்குத் தயார் செய்தது, மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற பெரும் பங்கு வகித்த செங்கோட்டை நூலகம் குறித்து இன்பா பேசியதோடு செங்கோட்டை அரசு பொது நூலகத்தின் நூலகர் அலுவலர்கள் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தேரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செங்கோட்டை நூலகத்தில்
இப்போது ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்.
முடிவில் வாசகர் வட்டப் பொருளாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *