மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சுற்றுலா. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்ல பேரூராட்சி மன்ற தலைவர் காளி கண்ணன் ராமசாமி செயல் அலுவலர் இளங்கோவன் இளநிலை உதவியாளர் வாசிமலை ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தூய்மை பணியாளர்களை சுற்றுலா அனுப்பி வைத்தார்கள்