குருவித்துறை குரு பகவான் கோவில்
குருபெயர்ச்சி விழா மேஷம் ராசிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியானார்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் குருவித்துறையில்
வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக விளங்கி வரும் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில் முன்பு தவக்கோலத்தில் சுயம்புவாக எழந்தருளி அருள்பாலித்து வரும் குருபகவான் கோவிலில் நேற்று மே.1தேதி குருபகவான் மேஷம் ராசிலிருந்து.ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியானார்.

ஆயிரக்கனக்கானோர் தங்கள் ராசி நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜைகள் செய்தனர்.இக் குருபெயர்ச்சி்விழாவை முன்னிட்டு நேற்று மாலை 3.30.மணியளவில் கோவில் வளாகத்தில் ஸ்ரீதர் பட்டர் சடகோபன் பாலாஜிபட்டர் ஆகியோர் தலைமையில் பரிகார மஹா யாகசாலை தொடங்கியது.

பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி மாலை 5.21.மணியளவில் மூலவர் குருபகவான் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேக ஆராதனைகளை நடந்ததேறியது.
அப்போது குருபகவான் மேஷம். ராசிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியாதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்ததுஇவ்விழாவில் மதுரை உயர்நீதி மன்ற நீதியரசர் புழகேந்தி டிஐஜி. ரம்யபாரதி. மாவட்ட கலெக்டர் சங்கீதா.வெங்கடேஷன் எம்.எல்.எ ஐயப்பன் எம்.எல்.எ. டி ஆர் ஓ சக்திவேல் .ஆர் டி ஓ..கக்கள் ஷாலினி சாந்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
இவ்விழா ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர்.கார்த்திகைசெல்வி தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் நாகராஜன் மணி. உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மேலும் திருக் கோவில்களூக்கு வரும் ,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணைங்க இன்று மே.2.ந்தேதி முதல் சித்திரரத வல்லப பெருமாள் மற்றும் குருபகவான் கோவில்களில் வாரத்தில் மற்ற நாட்களில் காலை 8.மணிக்கு நடை திறந்து நன்பகல் 12.30.மணியளவில் நடை சாத்தப்பட்டு பின்னர் பிற்பகல் 3.30.மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.மணியளவில் நடை முடிவும்..மேலும் வாரத்தில் வியாழன் கிழமை மட்டும் காலை 7.30.மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மதியம் 2.மணியளவில் நடை சாத்தப்பட்டு பின்னர் பிற்பகல் 3.30.மணியளவில் கோவில் நடைதிறக்கப்பட்டு இரவு 7.மணிக்கு நடை மூடப்படும் எனவும் மேலும் குரு பெயர்ச்சி முன்னிட்டு திருகோவில் நிர்வாகத்தில் ரூ.200.க்கு லெட்ச்சார்சனை டிக்கெட் வாங்கிய பக்தர்களுக்கு நேற்று மே.1.ந்தேதி மதியம் 2.மணிமுதல் 3.மணி வரை யாகசாலையில் பெயர் ராசிக்கு சங்கல்பம் செய்யப்பட்டது மேலும் ரூ.500.டிக்கெட்பெறும் மெய்யம்பர்களுக்கு இன்று மே. 2.ந் தேதிலிருந்து 16.ந்தேதி வரை தினசரி 50.நபர் வீதம் காலை 6.முதல் 7.வரை குருபகவான் சன்னதி முன்னிலையில் குருபகவான் வெள்ளிகாப்பு கவசத்தில் சிறப்பு தரிசனம் செய்து பெயர். ராசிகளுக்கு தனிதனியாக பரிகார அர்ச்சனை செய்து வெள்ளி டாலர் மற்றும் பிரசாதம் வழங்கப்படும் என திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி தெரிவித்தார். விழாவில் குடிநீர் சுகாதாரம் லைட் வசதி குருவித்துறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர்.
டி.எஸ்.பி..ஆனந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டிbu சப்இன்ஸ்பெக்டர்கள் ராசு.சின்னன் மற்றும் 400.க்கு மேற்ட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *