தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாத்தூர் சாலையில் உள்ள மாலை அம்மன் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் வேல்சாமி. இவர் ஆன்லைன் மூலமாக சட்ட விரோதமாக கேரளா லாட்டரி விற்பனை செய்வதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தனிப்படை பிரிவு காவலர் முத்துராமலிங்கம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கண்காணிப்பணியில் ஈடுபட்ட போது, ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனை செய்வதை உறுதி செய்தனர்.
இதையெடுத்து வேல்சாமியை கைது செய்த போலீசார் ஆன்லைனுக்கு பயன்படுத்திய செல்போன், லாட்டரி முடிவுகள் குறித்து எழுதி வைத்திருந்த பேப்பர்கள் மற்றும் ரூ.1320 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.