ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்தந்த பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்ய அமைச்சர் ஒன்றிய பேரூர் ஊராட்சி கிளைக் கழக தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தண்ணீர் பந்தல் கூடத்தினை ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
இந்த நிகழ்வு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும்கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தண்ணீர் பந்தல் கூடத்தினை திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர் நுங்கு பழவகைகள் குளிர்பானங்கள் மோர் போன்றவற்றினை வழங்கினார்.
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் சேந்தமங்கலம் நாகவேடு ரெட்டிபாளையம் பானாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி பவானி வடிவேலு புருஷோத்தமன் அப்துல் ரகுமான் அப்துல் நசீர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.