திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் போக்குவத்தை ஒழுங்குபடுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிகா(34) என்பவர் கணவனைப் பிரிந்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவருக்கு மனநலம் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் அவ்வப்பொழுது வீட்டை விட்டு வெளியேறும் இவர் சிறிது நாட்களில் மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு வந்து சேர்ந்து உள்ளார்

அங்கேயே தங்கிய ஜோதிகா இன்று காலை முதல் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய வண்ணம் இருந்துள்ளார் இதனை பார்த்த ஏராளமானோர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர் இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோதிகாவை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது இதனையடுத்து அவரது குடும்பத்தினரை அழைத்து விசாரித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *