தென்னை நோய் தாக்குதல் குறித்து வேளாண் மாணவி செயல்விளக்கம்.
வாடிப்பட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவி ஏ. கோமதி ,வாடிப்பட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தென்னையை தாக்கும் முக்கிய பூச்சிகளுக்குள் ஒன்றான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ யின் நோய் தாக்குதல் அதன் அறிகுறிகள் குறித்தும் தடுப்பு நடவடிக்கை மேலாண்மை குறித்தும் விளக்கி எடுத்து கூறினார்.
இதனையெடுத்து மஞ்சள் நிற ஒட்டும் பொறி வண்டு தாக்குதல் மற்றும் இப்பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தென்னை Transportation செயல் விளக்கம் செய்து காட்டினார்.இந்த தென்னை நோய் தடுப்பு கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் என பலர் பங்கேற்றனர்.