தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சுடர் ஜோதி ஓட்டம்

மே 5 ல் கோவை மாவட்டம் திருச்சி சாலையில் ராவுத்தர் பிரிவில் குமார் தோட்டத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாட்டிற்கு குமரி முதல் கோவை வரை சுடர் ஜோதி ஓட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் சுடர் ஜோதி ஓட்டம் திருப்பூர் மாவட்ட தலைவர் ஆத்திச்செல்வன் மாநில துணை தலைவர் கண்ணன் மற்றும் கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில செயலாளர் மகிஷா ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திப் பின்னர் இரயில் நிலையம் முன்பு இந்த ஓட்டம் ஆரம்பித்து அவினாசி ரோடு புஷ்பா தியேட்டர் வரை நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி தலைவர் ஜெயபாலன். மாநில கொள்கைபரப்பு செயலாளர் பிரகாஷ். மாநில இளைஞரணி துணை செயலாளர் மணிகண்டன். சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ். மற்றும் கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட துணை தலைவர் மாரிராஜன். இளைஞரணி தலைவர் வெங்காயம். இளைஞரணி செயலாளர் கண்ணன். இனியவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் கோவையில் நடைபெறவுள்ள 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாட்டில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநில தலைவர் அண்ணாச்சி முத்துகுமார் அவர்களின் கரத்தை வலுபெற செய்து மாநாடு வெற்றி பெற கலந்து கொள்ள வேண்டும் என்று மகிஷா ரமேஷ்குமார் கேட்டுக் கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *