அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் கல்லாதோர்கள் கண்டறியும் கணக்கெடுப்பு பணி குடியிருப்பு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2024-25 ஆம் கல்வியாண்டில் செயல்படுத்தும் நோக்கத்தில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் 03/05/2024 முதல் மே 24 தேதி வரை முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணி குடியிருப்பு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கணக்கெடுப்பு பணியினை வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராஜாத்தி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோர் தலைமையேற்று ஒவ்வொரு பகுதியிலும் துவக்கி வைத்தனர்.

கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் குறிஞ்சி தேவி, ஐயப்பன், அந்தோணி சேவியர் ,சரவணன், இளையராஜா, தாமோதரன் , கார்த்திகேயன்,செந்தில் ,டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் சுகன்யா ஆகியோர் கணக்கெடுப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள் ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உதவியுடன் கணக்கெடுப்பு பணியானது தொடர்ந்து வருகின்ற மே 24 தேதி வரை நடைபெற உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *