பாப்பிரெட்டிப்பட்டி,

கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003 – 2004 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர் மணி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மகாலிங்கம், நெடுந்கீரன், மணிமாறன், ஆனந்தன், மணிவண்ணன், சண்முகம், பெரியசாமி, வெங்கடாசலம், மனோகரன், ஜெயராமன், செந்தில்குமார், மல்லன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பணியாற்றிய சக ஆசிரியர்களுடன் அன்றைய நினைவுகளை பகிர்ந்தனர்,

இதே போல் மாணவர்கள் தங்களின் பள்ளிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இருப்போட்டோ எடுத்துக் கொண்டனர் . ஏற்பாடுகளை முன்னால் மாணவர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *