தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏரியில் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபம் நிலை ஏற்பட்டுள்ளது.
கடத்தூர் ஏரிக்கு பொதியம்பள்ளம் அணைக்கட்டு பகுதியில் இருந்து நல்லகுட்டலஅள்ளி ஏரிக்கு வரும் தண்ணீர் நிரம்பி அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் கடத்தூர் ஏரிக்கு வரும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தண்ணீர் வரும் கால்வாய் பகுதிகள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்துள்ள நிலையில், கடத்தூர் ஏரிக்கு தண்ணீர் வருவது கேள்விக்குறியாகி போன நிலையில் கடத்தூர் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை தண்ணீர் ஏரிக்கு செல்லும் நிலையில் ஏரியில் இருந்த லட்சக்கணக்கான மீன்களில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.
தண்ணீரில் இருக்கும் பல ஆயிரம் மீண்கள் உயிர் வாழ முடியாத நிலையில் தவிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது,அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கால் மீன்கள் செத்து மடியும் பரிதாப நிலை உருவாகியுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களாவது இதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வளர்களின் கோரிக்கையாக உள்ளது.