ஆலங்குளத்தில் கிரிக்கெட் போட்டி
பொ. சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டு.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தங்க செல்வம் திமுக மாவட்ட பிரதிதி அன்பழகன் சோனா மகேஷ் ஆகியோர் ரமுன்னிலை வைத்தனர்.
ஆலங்குளம் சண்டே கிரிக்கெட் கிளப் நிர்வாகி பிரகாஷ் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் .
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன் மாவட்ட தொண்டர் அணி தலைவர் மிலிட்டரி வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன்,உதய நீதிமன்ற தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
இந்த கிரிக்கெட் போட்டியில் மணிமுத்தாறு போலீஸ் அணி முதல் பரிசை வென்றது அவர்களுக்கு ரூபாய் 10,000 கோப்பையும் வழங்கப்பட்டது
இரண்டாவது இடத்தை சண்டே கிரிக்கெட் கிளப் பணி பெற்றது அவர்களுக்கு கோப்பையும் ரூபாய் 8,000 வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை ஆலங்குளம் ஏசிசி அணி வெற்றி பெற்றது அவர்களுக்கு ரூபாய் 5,000 கோப்பையும் வழங்கப்பட்டது. நான்காவது இடத்தை குருவங்கோட்டை சேர்ந்த மினி குருவை அணி பெற்றது அவர்களுக்கு ரூபாய் 3,000 கோப்பையும் வழங்கப்பட்டது
தொடர்ந்து ஐந்தாவது இடத்தை குத்த பஞ்சாப் என்சிசி அணி வெற்றி பெற்றது அவர்களுக்கு ரூபாய் 3000 கோப்பையும் வழங்கப்பட்டது…