திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் மாணவர்களை இன்று தெற்கு காவல் நிலையத்திற்கு நேரடியாக அழைத்து சென்று அதன் செயல்பாடுகள் விளக்கப்பட்டது.

இந்த செயல் விளக்கத்தில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் குழந்தைகள் பாதுகாப்பு முறைமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு நிகழ்விலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தினார். நிகழ்வில் சப் இன்ஸ்பெக்டர் ராமு, சமூக ஆர்வலர்கள் சீ.கேசவராஜ், கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஆசிரியை சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதியில் காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வந்தவாசி போர் நினைவு பீரங்கியை மாணவர்கள் பார்வையிட்டு அதன் செய்திகளை தெரிந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *