இளையான்குடியில் திமுக சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தில் அவதியடையும் பொது மக்களுக்கு பழரசம் மற்றும் பழங்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார்.
இளையான்குடி திமுக பேரூர் கழகம் சார்பில் பஜாரில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலில், பொதுமக்கள் சாலை ஓர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், மானாமதுரை எம் எல் ஏ தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ மதியரசன், நகரச் செயலாளர் நஜ்முதீன் ஆகியோர் வழங்கினார். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.