தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரை திருவிழா

தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல் ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்ட போலீசார் வருகை புரிந்துள்ளனர் தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும் இங்கு கடந்த ஏப்ரல் 17 இல் திருக்கம்பம் நடுதல் செய்து விழா துவங்கியது.

திருக்கம்பத்திற்கு பக்தர்கள் முல்லைப் பெரியாற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்து வருகிறார்கள் அங்க பிரதட்சணம் ஆயிரம் கண் பானை மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வருகிறார்கள் கோவில் சித்திரை திருவிழா இன்று துவங்கியது இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டு மே 14 நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும் என கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்

கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தேனி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் 24 மணி நேர பேருந்து சேவை வழங்க மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார் பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல் ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆற்றங்கரை கோயில் சுற்றுப்பகுதி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன திருவிழாவிற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

தீயணைப்புத்துறை வாகனங்கள் மருத்துவ முகாம் நான்கு இடங்களில் ஆம்புலன்ஸ் தயாராக வைக்கப்பட்டுள்ளது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அக்னிசட்டி நேத்திக்கடன் நிறைவேற்றும் தெப்பத்திலிருந்து அக்னி சட்டி பானைகள் அகற்றப்பட்டன திருவிழாவை ஒட்டி முல்லை பெரியார் தெரு பக்தர்கள் வசதிக்காக கூடுதல் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது பொழுதுபோக்குக்காக ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *