புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதி திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா திமுக துணை அமைப்பாளர் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு குளிர் பானங்கள் , பழங்கள் , வெள்ளரிப்பிஞ்சு போன்றவை வழங்கப்பட்டது :

சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு
தமிழ்நாடு முதல்வர் ஆணைப்படி
புதுச்சேரி உப்பளம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் காய்கள் மற்றும் பழங்கள் அமைத்து கோடைகாலம் முழுவதும் குளிர்ச்சியான பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.

நீர் மோர் பந்தல் நிகழ்ச்சியை சட்டமன்ற எதிர்கட்சி கொறடா , திமுக மாநில துணை அமைப்பாளர் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்ச்சியான மோர், வெள்ளரிப்பழம் ஜூஸ், தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு போன்றவைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி துணை செயலாளர் ராஜி மற்றும் நிசார் முன்னிலை வகித்தனர், உடன் மாநில இளைஞர் அணி முருகானந்தம், மாநில பிரதிநிதி மணிகண்டன் மற்றும் கணேசன், மகளிர் அணி பொன்னி மற்றும் ஜோஸ்லின், கிளை செயலாளர்கள் செல்வம், கலப்பன், விநாயகமூர்த்தி, அன்வர், பாபு,செந்தில், ராகேஷ், மற்றும் நிர்வாகிகள் செழியன்,அஜித்ராஜி, மோரிஸ், ரகுமான், பாலு, மரி ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *