வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல்.
திண்டுக்கல் N.S.நகர் பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரிய அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் N.S.நகரில் இயங்கி வருவது கண்டறியப்பட்டது.
அந்த நிறுவனத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டிப்பதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரிய தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.