பல்லடம் செய்தியாளர் தாமோதரன் 98 42 42 75 20
கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் சாலை முழுவதும் எம் சாண்ட் மாற்று மணலை கொட்டிய லாரி தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த அவினாசி பாளையம் போலீசார் திருப்பூர் மாவட்டம்,7-05-2024, அவிநாசி பாளையத்திலிருந்து கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நோக்கி மாற்று மணல் எனப்படும் எம் சாண்ட் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது அந்த லாரியின் பின்புறம் எவ்வித பாதுகாப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எம் சாண்ட் ஆங்காங்கே காலையில் கொட்டப்பட்ட நிலையில் லாரி சென்று கொண்டிருந்தது புதிய பாதுகாப்பு விதிமுறைகளை இந்த லாரி உரிமையாளர் செய்யவில்லை என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் சாலையில் கொட்டிய மாற்று மணலால் பின் தொடர்ந்து வந்த இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சறுக்கிவிட்டு கீழே விழுந்து எழுந்து செல்வதாக நிலைமை இருந்தது இதனால் நான்கு இரு சக்கர வாகனங்களும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன வாகன ஓட்டிகளுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற அவினாசி பாளையம் போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்
மேலும் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் மாற்று மணலை சாலையில் கொட்டியவாறு ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுனருக்கு அபராதம் விதித்தனர் மேலும் வழித்தடத்தில் வந்து செல்லும் மாற்று மணல் கொண்டு செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே இப்பகுதியை கடந்து செல்ல முடியும் என்றும் இல்லாவிட்டால் வாகன பறிமுதல் அபராதம் விதிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்