தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் வட்டம்,வயல் காட்டு காலனி கிராமத்தில் மிண்ணொளி கபடி போட்டி நடந்தது.
இந்த போட்டி இந்திய சுதந்திரத்திற்காக உலகத்திலேயே முதல் மனித வெடிகுண்டாக மாறி தன் உயிரை மாய்த்த மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் நினைவாக மருதம் கபடி கிளப் சார்பாகவும்,வயல் காட்டு காலனி ஊர் பொதுமக்கள் சார்பாகவும் முதலாம் ஆண்டு மிண்ணொளி கபடி போட்டி நடந்தது.இந்த போட்டியில் 70 க்கும் மேற்பட்ட அணியினர் விளையாடினார்கள்.
இந்த கபடி போட்டியை தேவேந்திர பேனாக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் T.C.பாலசுந்தரம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .
கபடி போட்டியை மருதம் கபடி குழுவினர் சந்தோஷ், அண்ணாமலை,சுரேஷ்கணி,மாதவன்,கதிர்,மணிகண்டன்,தேவேந்திர பேனாக்கள் இயக்க செயலாளர் ராஜ்குமார்,மற்றும் ஊர் நாட்டாமைகள் ஆகியோர்கள் சிறப்பாக போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.போட்டி முடிவில் வயல்காட்டு காலனி மருதம் கபடிக்குழு முதல் பரிசை பெற்றது.
இவ்விளையாட்டு திருவிழாவில் தேவேந்திர பேனாக்கள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் நடிகர் மாரிதுரை , பல இயக்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.