கழுகுமலை அருகே உள்ள களப்பாளங்குளம் கிராமத்தில் புதிய டி.டி.டி.ஏ தொடக்க பள்ளிக்கு அடிக்கல் நாட்டு விழா ;-

கழுகுமலை அருகே உள்ள களப்பாளங்குளம் கிராமத்தில் புதிய டி.டி.டி.ஏ தொடக்க பள்ளிக்கு அடிக்கல் நாட்டு விழா அச்சம்பட்டி சேகர தலைவரும் பள்ளி நிர்வாகியுமான டேனியல்தனசன் தலைமையில் நடைப்பெற்றது.

களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சாலமன்வேதநாயகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஊர் நாட்டாமை வள்ளிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து சேகர குரு ஆரம்ப ஜெபம் செய்து புதிய பள்ளிக்கான அடிக்கல் நாட்டினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் பள்ளி கட்டுவதற்கான நிதியுதவி ரூ. 50 ஆயிரத்தை பள்ளி நிர்வாகி டேனியல்தனசனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி உதவி ஆசிரியர் அனிதா நன்றியுரை கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *