ஆறு மாதம் சிறை தண்டனை பெற்ற மூன்று மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை விமான நிலையம் வருகை

தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஏப்ரல் நான்காம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த பொழுது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட இந்த மூன்று மீனவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்ததை அடுத்து தமிழக அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது இந்த நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதி மூன்று மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது 3 மீனவர்களையும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது இதனை அடுத்து மூன்று மீனவர்களுக்கும் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அவசரகால பாஸ்போர்ட்டுகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய மீனவர்கள் மூன்று பேருக்கும் சுங்க சோதனை குடியுரிமை சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் முடித்த பின்பு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர் மூன்று மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று ராமேஸ்வரத்திற்கு தனி வாகன மூலம் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *