தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் மாவட்ட செயலாளர் வழகறிஞர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க தென்காசி தெற்கு மாவட்ட பகுதிகளில் திமுக சார்பில் கோடை வெயிலை யொட்டி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆலங்குளத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அன்னக்கிளி ராஜதுரை ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ராஜதுரை தலைமை வகித்தார்.
ஆலங்குளம் ஒன்றிய சேர்மனும், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான எம்.திவ்யா மணிகண்டன், பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,
அங்கு அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் மற்றும் குளிர் பானங்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் இட்லி செல்வன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளரும், தொழிலதிபருமான மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆம்பூர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், ஸ்டீபன் சத்யராஜ் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால்,காசிப்பாண்டியன், அருணாசலம், அருணா பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.