கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், பூதிமுட்லு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி எஸ்.பூலட்சுமி அவர்கள், கடந்த மாதம் மத்தியபிரதேசம் மாநிலம், குவாலியரில் நடைபெற்ற தேசிய பேரா நீச்சல் போட்டியில் (2023-2024) இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) பி.புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் ஆகியோர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *