சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.அறிக்கை.
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கோரச் சம்பவத்தில் 10 பேர்உயிரிழந்துள்ளனர்.பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்புப் பணிகள் நடைபெற்றதாகத் தெரிகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதிபெற்று நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவித்தி
ருக்கிறது. விபத்து குறித்த செய்திகளைத் தொலைக்காட்சி
யில் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
உயிரிழந்தவர்களைப் பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இது போன்ற வெடி விபத்துக்கள் நடைபெற்று வருவது கவலைஅளிக்கிறது.விபத்து சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் உரிய முன்னெடுப்பு களைத்தமிழ்நாடு அரசு கண்டிப்புடன் மேற்கொள்ள வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின்சார்பில் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.