பவானி அருகே காலிங்கராயன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மதர்ஸ் மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கேக் வெட்டி பரிசுகள் வழங்கப்பட்டது…

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காலிங்கராயன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மதர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி தாளாளர் முத்துச்சாமி தலைமையில் மாணவர்களுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.., பள்ளியில் வர்ஷா என்ற மாணவி 489 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும் நித்திய ஸ்ரீ என்ற மாணவி 487 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும் நிவேதா என்ற மாணவி 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *