கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் “12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024” நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் (10.05.2024) அன்று குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கர்க் உள்ளிட்ட பலர் உள்ளனர்.