திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த புகழ்பெற்ற வெண்குன்றம் தவளகிரிமலை உள்ளது. இந்த மலையில் வன விலங்குகளும், மூலிகைச் செடி மற்றும் மரங்களும் உள்ள நிலையில் தற்பொழுது கோடை காலம் என்பதால் மலையைச் சுற்றி தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. எனவே மலை சுற்றியுள்ள மூலிகை செடிகளும் தீயில் கருகிய நிலையில் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஊர் பொதுமக்கள் மலையானது அடிக்கடி தீப்பற்றி எரிவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *