மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:
மாவட்ட அளவிலான இந்த கோடைகால பயிற்சி முகாமில் டேக்வாண்டோ, கைப்பந்து, தடகளம், இறகுபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவரல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் ,ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பித்தல் வேண்டும் ,பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் , பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நபரும் வருவாய் மெசின் மூலம் மட்டுமே சந்தா தொகை ரூ.200/- செலுத்த வேண்டும். சந்தாத் தொகையானது ரொக்கமாகப் பெறப்படமாட்டாது.
பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் 26.04.2024 அன்று காலை 6.00 மணி முதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரது தொலைபேசி எண்.7401703516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே பெரம்பலூர் மாவட்டதிலுள்ள விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்/வீராங்கனைகள் அதிகஅளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *