ம.சங்கரநாராயணன், செய்தியாளர்

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 6ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் மாநகரில் பசுமையை உருவாக்கும் வகையில் மறைந்த பெரியசாமியின் நினைவுகளை போற்றும் வகையில் போல்பேட்டை பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வுக்கு ஆல்கன் டிரஸ்ட் ஒருங்கினைப்பாளர் வக்கீல் மோகன் தாஸ் சாமுவேல் தலைமை வகித்தார்.

மறைந்த பெரியசாமியின் மனைவி எபனேசர் பெரியசாமி மரக்கன்று நாட்டினார்.
நிகழ்ச்சியில் மாநகர ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டச்செயலாளர் முத்துராஜா, முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வன், பெரியசாமியின் சகோதரர் செல்லப்பாண்டியன், திமுக பிரமுகர்கள் சற்குணம், மகேஸ்வரசிங், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *