விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் கிடங்கல் – 1இந்திரா காந்தி பேருந்து நிலையத்தில் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும்,முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான C.Ve.சண்முகம் அவர்களின் ஆணைக்கிணங்க அப்பகுதியின் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் N.V.R(எ) N.விஜயகுமார் ஏற்பாட்டில் மோர் மற்றும் R.o குடிநீர் பந்தலை சி. வி.சண்முகம் கடந்த ஏப்ரல் மாதம்15ம் தேதி துவக்கி வைத்தார்.
இந்நிலையில் தொடர்ந்து இந்த சேவை அங்கு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 50வது நாளான இன்று பொதுமக்களுக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் T.K.குமார் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் நகர மன்ற உறுப்பினர் N.V.R.(எ)N. விஜயகுமார் , விவசாய அணி ஒன்றிய செயலாளர் பட்டி பாலகிருஷ்ணன் முப்பதாவது வார்டு மகளிர் அணி லலிதா,ஜீவுஜியா உட்பட கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.