சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் போக்குவரத்து போலீஸ் ஒருவரை வாகன ஓட்டி கன்னத்தில் அறைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தங்கராஜ் என்பவர் 100 அடி சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி விழுந்தார். இதைக் கவனித்த தங்கராஜ் ஓடிச்சென்று அவரை தூக்கி விட்டார்.
அப்போது பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் மது அருந்தியிருப்பதை தங்கராஜ் கவனித்தார். உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த அந்த வாலிபருக்கும் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போதையில் இருந்த அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால், மீண்டும் அங்கு வந்த வாலிபர் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜை கன்னத்தில் அறைந்தார். இதனல், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.