அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கோவை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் புவனேஸ்வரி விளக்க உரையாற்றினார் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் என்று பேசினார்

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ரெண்டு மணி நேரம் நடந்தது ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வைரவேல் பாரதிய ஜனதா கட்சி பிரச்சார குழு மாவட்ட தலைவர் முத்துவேல் துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் தனலட்சுமி ஜெயங்கொண்டம் மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *