வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்த்திய தென்னை டானிக் செய்து காட்டல் நிகழ்வு

கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் கூகலூர் விவசாயிகளுக்குத் தென்னை டானிக் பயன் படுத்தும் முறையை செயல் விளக்கம் அளித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு வேளாண்மை பயிலும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் மூலம் கோபிசெட்டிபாளையத்தில் தங்கியுள்ளனர். தென்னைக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்த தென்னை டானிக் பயன்படுத்தும் முறை குறித்த செயலாக்கம் விவசாயிகளுக்கு நிகழ்த்தப்பட்டது. அதாவது 40 மில்லி டானிக் மற்றும் 160 மில்லி தண்ணீர் கலவையை ஒரு பாலித்தீன் கவரில் எடுத்து அதில் சேத மடையாத இளம் வேரை நுழைத்து நூலால் கட்டி விட வேண்டும். இந்த டானிக்கை 6 மாத இடைவெளியில் வருடத்திற்கு இருமுறை கொடுக்கலாம். மேலும் தென்னை டானிக்கின் பயன்களான குறும்பை உதிர்வு குறைதல், பச்சையம் மற்றும் பாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கூடுதல் மற்றும் விளைச்சல் 20% வரை அதிகரித்தல் போன்றவை குறித்து மாணவிகள் விவசாயி களுக்கு விளக்க உரையாற்றினார்கள். இச்செய்து காட்டலில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *