பொன்னேரி

ஆண்டார்குப்பம் முருகர் கோயில் பிரம்மோற்சவ பெருந்திருவிழா  கொடி யேற்றதுடன் தொடங்கியது 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட் டது ஆண்டார் குப்பம் ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பிரம்மோற்சவ பெருந் திரு விழா நடைபெறுகிறது.

இதனையடுத்து இன்று கொடியே ற்றத்துடன் தொடங்கியது. இதைய டுத்து  12 நாட்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. 

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெறுமா று ஆண்டார்குப்பம் முருகர் கோயி ல் செயல் அலுவலர் மா. மாதவன், பரம்பரை அறங்காவலர் ராஜராஜ குருக்கள் கேட்டுக் கொண்டுள்ள னர். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அர்ச் சகர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.  நடைபெற்ற கொடி யேற்று நிகழ்ச்சியின் போது வரும் 9-ஆம் நாள் பச்சை மயில் வாகன உபயதாரரான வெற்றி வேல் முருகன், சக்திவேல் முருகன் திரையரங்க உரிமையாளர் கே ஏ இராமலிங்கம், கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் நகர செயலா ளர் மு க சேகர், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜானகிராமன்,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் ஏராளமா னோர்கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *