மதுரை மாநகராட்சி விளாங்குடி 20வார்டில் கடந்த 5 நாட்களாக குடிநீர் குழாய் தண்ணீர் வரவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் குடியிருக்கும் சொக்கநாதபுரம் 1வது,மற்றும் 2வது தெருவில் பாதாள சாக்கடை மற்றும் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் வேலை நடப்பதால் மாநகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவால் அடிக்கடி மெயின் பைப்புகள் உடைந்தால் சரி செய்வது இல்லை மிக அலட்சியப் போக்குடன் பணிகள் நடைபெறுவதை கண்டித்து விளாங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் மாமன்ற உறுப்பினர் சி.நாகஜோதி சித்தன் தலைமையில் நடைபெற்றது.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் குறைகளை சரி செய்கிறேன் என உறுதி அளித்த பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.