கோவை மாவட்டம் வால்பாறையில் மேதினத்தை முன்னிட்டு நலிவடைந்த பெண் தொழிலாளர் கள் 21 பேர்களுக்கும் ஆண் தொழிலாளர்கள் 19 பேர்களுக்கும் மொத்தம் சுமார் 1 லட்டத்து எட்டு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை எம்.ஜி.ஆர்.தோட்ட தொழிலாளர் சங்கத்தலைவர் வால்பாறை வீ.அமீது தொழிலாளர்களுக்கு வழங்கி மேதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
வால்பாறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட பாசறை இணைச்செயலாளர் அ.சலாவுதீன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் கேபிள் நரசப்பன், செந்தில் குமார் அண்ணாத்துரை, முத்துமுடி பாலன், வாழைத்தோட்டம் இம்மானுவேல், யாழ்கருணாகரன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிலாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்