கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பாக மலர் வழிபாடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கால இடைவெளி காரணமாக நடைபெறமால் இருந்த மலர் வழிபாடு இந்த ஆண்டு வெகு சிறப்பாக துவங்கியது.. கோடை காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அர்த்த கால பூஜையாக நடைபெற்றது

இதில், சுமார் 400கிலோ அளவிலான அரிய வகை மலர்களை கொண்டு சிறப்பு மலர் வழிபாடு நடைபெற்றது. தாமரை, அரளி,, செண்பகம், பாரிஜாதம், வாடாமல்லி, வெச்சி, மருகு, மரிக்கொழுந்து, என 48 வகை மலர்களை கொண்டு மூலவரான சிவனுக்கு மலர் வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.

பட்டிநாயகர் சைவநெறி அறக்கட்டளை தலைவர், முனைவர் அ.மா.இலட்சுமிபதிராசு தலைமையில் நடைபெற்ற இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *