மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற தேவாரம் ஒப்புவிக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற கார்த்திகா தேவி,விஜய்கண்ணன்,சொர்ணமேகா,வள்ளியம்மை,ஹரிப்ரியா,முகல்யா,லெட்சுமி,தீபா,ஓவியா,பிரியங்கா ,ஜெயஸ்ரீ உட்பட 41 மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் போட்டிகளை நடத்திய முத்தமிழ் வேத திருசபையின் துணை செயலர் ஆதி ரெத்தினதிம் பரிசுகளை வழங்கி பாராட்டினார் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.ஏராளமான பெற்றோர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.