நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளாநல்லூர், பொன்குறிச்சி, முத்துக்காளிப்பட்டி, குருக்கபுரம், சிங்களாந்தபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று (06.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நியமிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆண்டகளூர்கேட் பகுதியில் ”நம்ம ஊரு சூப்பரு” சுகாதார விழிப்புணர்வு பேரணியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்கள் கடைகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம், வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.