நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் பல்வேறு முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களாலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீபாரணை நடைபெற்றது.
சிறப்பு பூஜையை கோவில் பூசாரிகள் மணி, செல்வம்,சண்முகம்,ராஜா, கணேசன், கடற்கரை, யுவராஜ், மதி, மற்றும் கோயில் பெரிய பூசாரிகள் என பலர் தினந்தோறும் அலங்கார அபிஷேகம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நித்திய சுமங்கலி அம்மனை வழிபட்டு சென்றனர்..