தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் (கட்சி) அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் நிறுவனத் தலைவர் ஜே. ஜோயல் சுந்தர் சிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் எதிர்வரும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை நடைபெற்றது இந்த விழாவில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவதாகவும்,தொடர்ந்து எங்களது கட்சி அனைத்து மக்களுக்கான கட்சியாக பரிணாம வளர்ச்சி பெறும் என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் கிளைகளை உருவாக்குவது மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.