தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா. சென்னை, மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தமிழகத்தின் புதிய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் டிஆர்பி ராஜாவுக்கு கவர்னர் ரவி பதவிப்பிராமணம் செய்து வைத்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா மன்னார்குடியில் 3 முறை எம்.எல்.ஏவாக தேர்வானார். டி.ஆர்.ராஜா பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அமைச்சாக பதவியேற்றப்பின் ராஜ்பவனில் கவர்னருடன் முதல்-அமைச்சர் மற்றும் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கவர்னர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக அரசின் அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன இலாகா ஒதுக்கப்படும் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *