கோவை மாவட்டம் வால்பாறையில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரத்தின்சார்பாக வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வானவர்கள் சிவக்குமார், அய்யாச்சாமி ஆகியோர் முன்னிலையில் வனப்பகுதிகளில் மது அருந்தக்கூடாது, தேவையற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, வனப்பகுதியில் உலாவரும் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது, மக்காத பிளாஸாடிக் மற்றும் கண்ணாடி பொருட்களை வனப்பகுதியில் போடக்கூடாது, வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது வேகமாக செல்வதோ கூடாது, மிதமான வேகத்துடனும் எச்சரிக்கையுடனும் சென்று விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வால்பாறை வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் மனித வன உயிரின மோதல் தடுப்பு குழுவினரும் கலந்து கொண்டனர்