அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின்முறை மற்றும் சென்னை வாழ் 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் முறையாளர்களுக்கு தனித்து புறதான பாத்தியப்பட்ட ஸ்ரீ சாத்தாவுராயன் ஸ்ரீ காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது

தொடர்ந்து 22.05.23 திங்கட்கிழமை அன்று மாலைதிருவிளக்குபூஜை நடைபெற்றது மறுநாள் செவ்வாய்க்கிழமை சாத்தாவுராயன் கோவிலில் அலங்காரம் மற்றும் அபிஷேகம் தீபாதாரணைகளும் நடைபெற்றது அன்று இரவு காளியம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்து சக்தி கரகம் துணைக் கரகம் மற்றும் முளைப்பாரியுடன் மேள தாளங்கள் முழங்க வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது 24.05.23 புதன்கிழமை அதிகாலை மாவிளக்கு எடுத்து நகர் வலம் வருதல் சாத்தாவுராயன் கோவிலில் பழத்தட்டுடன் பொங்கல் வைத்தல் அதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துதலும் நடைபெற்றது

அன்று மாலை ஸ்ரீ காளியம்மன் சாமிக்கு பால்குடம் எடுத்து வருதல் மற்றும் பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது 25.05.23 வியாழக்கிழமை சக்தி கரகம் முளைப்பாறியுடன் கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும் மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை பாலமேடு 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின்முறை சங்கம் மற்றும் சென்னை வாழ் 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் உரையாளர்கள் செய்து இருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *