கோவையில் கடந்த 80 களில் மாருதி நிறுவனத்தின் ஜீப் ரக வாகனங்களில் ஜிப்சி தனி இடத்தை பிடித்துள்ளது.இந்திய ராணுவத்தில் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஜிப்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உற்பத்தியை நிறுத்தியது.
இந்நிலையில் புதிய பரிணாமத்துடன் மாருதி நிறுவனம் ஜிம்னி எனும் ஜீப் ரக வாகனத்தை அறிமுகபடுத்தி உள்ளது.இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோ நெக்சா ஷோரூமில் நடைபெற்றது.
அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் துணை தலைவர் அனீஷ் முத்துசாமி தலைமையி்ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பந்தய வீரர் அர்ஜூன் பாலு கலந்து கொண்டு புதிய வாகனத்தை அறிமுகம் செய்தார்.
பாதுகாப்பு அம்சங்கள் மிக தாராளமாக உள்ள புதிய ஜிம்னி வாகனத்தில் , 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா என ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளதி குறிப்பிடதக்கது.