கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஐந்தாண்டுகள் நடைபெறாமலிருந்த கோடைவிழா தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சார் ஆட்சியர் பிரியங்கா நேற்று நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம், நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், வட்டாட்சியர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தொடங்கிவைத்து தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் நாளை நிறைவு விழாவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்ற வருகைதரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் தீவிர ஏற்பாடு நடைபெற்று வருகிறது