எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருவத்தூர் கிராமத்தில் பெரிய தெருவில் பன்னீர்செல்வம் ,சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர், இவர்களது வீட்டின் வாசலில் உள்ள மின்கம்பி காற்றின் காரணமாக அறுந்து வீட்டின் வாசலில் கட்டப்பட்டிருந்த மாட்டின் மீது விழுந்துள்ளது,

மாட்டின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த சாந்தி வீட்டின் வாசல் கதவை திறக்கும் போது அதில் மின்கம்பி பட்டிருப்பதை அறியாமல் கதவை திறந்துள்ளார்,

இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சாந்தியை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,இதில் பசு மாடு சம்பவ இடத்தில் உயிர் இழந்தது.இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *