மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பின்படி, குடிமைப் பணி களுக்கான முதல் நிலைத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங்களில் நடைபெற்றது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், குடி மைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு கடந்த ஆண்டில் அறிவிப்பாணை வெளியானது.
இந்தத் தேர்வில் பங்கேற்க மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 6,882 பேர் விண்ணப் பித்திருந்தனர். இதையொட்டி, மதுரை மாவட்டத்தில் 15 கல்வி நிலையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 9.30 முதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இந்தத் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களை ஆட்சியர் சங்கீதா பார்வையிட்டார்.
தேர்வுப்பணிகளைக் கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 5 அலுவலர்களும், வட்டாட்சியர் நிலையில் 17 அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.